அதி
விதி மதி கதி கணபதி
ஓம்
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
குணமதிக மாமருணை கோபுரத்துள் மேவும்
செல்வக் கணபதியை கைதொழுதக் கால்!
ஓம்
திருவாக்கும்
செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர் தம்கை!
ஓம்
விநாயகனே
வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வெட்கை தணிவிப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து
ஓம்
திகட
சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சகரன் மெய்ப்பதம் போற்றுவோம்
ஓம்
மண்ணுலகத்தினிற்
பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுற
கண்ணுதல் உடையதோர் க்ளிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
ஓம்
திருவும்
கல்வியும் சீருண்ட் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையை காய்க்கவும்
பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்து பிள்ளையை பேணெவாம்!
ஓம்
கணபதி
என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கருமம் இல்லையே!
ஓம்
திருவும்
கல்வியும் சீரும் சிறப்பும்
உன்திருவடி புகழ்பாடும் திறமும்
நல் உருவும் சீலமும் ஊக்கமும்
தாழ்வுறா மனமும் தந்தெனதுள்ளத்தமர்ந்தவா
குருவும் தெய்வமுமாகி அன்பாளர்தம்
குறை தவிர்க்கும் குணப்பெரும் குன்றமே
வெருவும் சிந்தை விலக கஜானனம்
ஓம்விளங்கு சித்திபுத்தி விநாயக வள்ளலே!
No comments:
Post a Comment