விநாயக பெருமானின் தோற்றம்:1
திருக்கயிலாயத்தில் மந்திர சித்திர மண்டபத்திற்கு பார்வதி
தேவியுடன் பரமேஸ்வரர் எழுந்தருளினார்.அங்கே 7 கோடி மந்திர சித்திரங்கள்
பொறிக்கப்பட்டிருந்தன.அவற்றின் நடுவில் ஆடி மூர்த்தியான விநாயக பெருமான் சமஷ்டி
பிரணவமாகாவும் வியஷ்டி பிரணவமாகவும் வீற்றிருந்தார்.பார்வதி தேவியும் பரமேஷ்வரணூம்
பலகாலமாக நாமெல்லாம் தவம் செய்யும் இந்த பிரணவ மூர்த்தியான பர பிரம்மம் நமக்கு
பிள்ளையாக அவதரித்தால் எப்படி இருக்கும் என சத எண்ணி வந்தனர்.அவர்களது எண்ணத்தை
உள்வாங்கிகொண்டு பிரணவம் யானை முகமுடைய கடவுளாக அவதரித்தது!
கடவுளாயினும் ஆயினும் பெற்ற தாய் தந்தையர்க்கு குழந்தை
அல்லவா!அக்குழந்தை இருவரின் கால்களிலும் விழுந்து ஆசி பெற்றது.மாதுளம்பூ நிறம்
உடைய அக்குழவியை அம்மையும் அப்பனும் உச்சி
முகர்ந்து ,உள்ள களிப்புடன் ஐயனே! நீர் பர பிரம்மம் எமக்கு புதல்வராய்
வாய்த்தமைக்கு உமக்கு நன்றி.இடையூறு களையும் ஏந்தலே! கணங்களின் தலைவனே! இன்று
முதல் நாங்கள் உம்மை கணபதி என்றும் கணேசன் என்றும் அழைத்து மகிழ தாங்கள் சம்மதிக்க
வேண்டும் என்று வினவ அந்த தெய்வ குழந்தை தாயே! தந்தையே! நான் கடவுளே ஆயினும் உமக்கு
பிள்ளை ஆதலால் எம்மை முழுக்க முழுக்க பிள்ளையகாவே பாவிக்கவும்,தெய்வம் என்ற
நோக்கில் பார்த்தால் நமக்கு இடையே உள்ள பந்தம் சற்று விலகி செல்கிறது!எமக்கு நீங்கள்
இட்ட பெயர் சம்மதமே!எண்று கூறி பிரணவ ஓசையுடன் புன்னகைத்தது!
No comments:
Post a Comment