108 கணபதி பாடல் தியானம் பகுதி - பாடல் - - -
முற்பவத்தில் மதுர மொழி மங்களத்து
1.ஓம்
முற்பவத்தில் யான்புரிந்த தீவினைகள்
முழுதகற்று முகத்தினானை
அற்பசுகத் திலெனை யழுத்தா ஐங்ககரணை
பிற்பவமு மகற்றும் கோவை
சொற்பழுது புரியாத வணிகர்குலம்
தினம் பணியும் துணைத்தாளானை
கற்பகத்தின் மிடியகற்றும் கற்பகமாம்
விநாயகனை கருத்தில் வைப்பாம்!
2.ஓம்
மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்பதத்தை
முதிரநினைய வல்லார்க்கரிதோ முகில்போல் முழங்கி
யதிரநடந்த் திடும்யானையும் தேருமதன் பின்வருங்
குதிரையும்காதங் கிழவியும் குலமன்னனே!
3.ஓம்
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
சங்கரனார் தருமதிலாய் சங்கடத்தை சங்கரிக்கும்
எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
4.ஓம்
மண்ணகம் வளமை எய்த
மலர் தமிழ் ஆட்சி ஓங்கத்
திண்ணமாய் நாட்டில் எங்கும்
தென்றமிழ் இசையே மல்க
விண்ணவர் பணிந்து போற்றும்
விரிசடைச் செல்வர் நந்தம்
கண்ணுதற் கடவுள் தந்த
களிற்றினை பணிதல் செய்வாம்!
என் கேமராவில் பதிந்தவை R.P.OM
முற்பவத்தில் மதுர மொழி மங்களத்து
1.ஓம்
முற்பவத்தில் யான்புரிந்த தீவினைகள்
முழுதகற்று முகத்தினானை
அற்பசுகத் திலெனை யழுத்தா ஐங்ககரணை
பிற்பவமு மகற்றும் கோவை
சொற்பழுது புரியாத வணிகர்குலம்
தினம் பணியும் துணைத்தாளானை
கற்பகத்தின் மிடியகற்றும் கற்பகமாம்
விநாயகனை கருத்தில் வைப்பாம்!
2.ஓம்
மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்பதத்தை
முதிரநினைய வல்லார்க்கரிதோ முகில்போல் முழங்கி
யதிரநடந்த் திடும்யானையும் தேருமதன் பின்வருங்
குதிரையும்காதங் கிழவியும் குலமன்னனே!
3.ஓம்
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
சங்கரனார் தருமதிலாய் சங்கடத்தை சங்கரிக்கும்
எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
4.ஓம்
மண்ணகம் வளமை எய்த
மலர் தமிழ் ஆட்சி ஓங்கத்
திண்ணமாய் நாட்டில் எங்கும்
தென்றமிழ் இசையே மல்க
விண்ணவர் பணிந்து போற்றும்
விரிசடைச் செல்வர் நந்தம்
கண்ணுதற் கடவுள் தந்த
களிற்றினை பணிதல் செய்வாம்!
No comments:
Post a Comment