கற்பக விநாயகர் திருப்பள்ளி எழுச்சி
என் கேமராவின் பதிவு
1.ஓம்
ஓமெனும் மந்திரத்ட் துட்பொரு ளானாய்
உணர்ந்தவர் நெஞ்சில் ஒளிவிளக்கானாய்
சாமியென் றுன்னை வாழ்த்திடும் அடியார்
தண்டமிழ் பாடத் தலையசைக்கின்றாய்
ஏமமும் நானே என்பது காட்டி
இடக்கரந் தன்னை இடையினில் வைத்தாய்
காமியத் தால்வரும் கவலைகள் மாற்றும்
கற்பகமே ! பள்ளி எழுந்த்தரு ளாயே!
2.ஓம்
வீசிய பெருஞ்செவி வேழமுகத்தாய்!
விழித்திரி அற்புத வித்தகன் ஆனாய்
தேசி விநாயகன் உன்னடி தொழவே
செந்ததமிழ்ப் பாணரும் யாழுடன் வந்தார்
பேசிய திருமுறை ஓதிய சான்றோர்
பிள்ளையுள் சந்நிதி பேணி பணிந்தார்
காசியில் மிஞ்சிய பிள்ளையார் பட்டிக்
கற்பகமே பள்ளி எழுந்தரு ளாயே!
3.ஓம்
ஒருமருப் போடும் இருசெவி கொண்டாய்
உணர்த்திடும் முக்கண் நாலுவாய் பெற்றாய்
திருவளர் அஞ்செழுத் தோதியே வைத்தாய்
சிவனுருவ்வாய் கஙை ஆறு புனைந்தாய்
இருமையும் ஆக்கிடும் ஏழிசை யானாய்
எட்டவொணா இன்பம் எட்டிட வைத்தாய்
கருவடை யாதெமைக் காத்தருள் புரியும்
கற்பகமே! பள்ளி எழுந்தருளாயே!
4.ஓம்
கதியென ந்ன்றாள் கருதிநிற்கின்ற
கணங்களினால்பெயர் கணபதி ஆச்சோ?
துதிசெயும் அடியவர் திருமுறை பாடித்
துதிக்கையினால் கரம் துதிக்கையென்னாச்சோ!
மதிதரும் மதியென வந்து
எங்கள் விதிதனை மாற்ற
கதிரென வந்தகக் காட்டினில்வளரும்
கற்பகமே! பள்ளிஎழுந்தருளாயே!
5.ஓம்
காதிடும் உந்த்தன்கருணையைக் கண்டே
கண்ணனும் ஆழியில் கந்துயில் கின்றான்
கீர்த்தி மிகுந்த்த உன் சேவையினாலே
தில்லையில் ஈசன் திருநடம் புரிவான்
வேர்த்திடும் போதினில் காத்தலில் லாயோ?
மேதினி மேல்துணை வேறினியுண்டோ?
காத்திருக்கின்றவர் கண்புனல் மாற்ற
கற்பகமே! பள்ளி எழுந்தருளாயே!
6.ஓம்
சீரமர் கொன்றைத் திருவீச ரோடும்
சிவகாமி அன்னை காத்திருகின்றால்
வாரமர் குழலாள் வடிவுடை யாளொடும்
வயிரவன் பட்டி வளரொளி நாதர்
பேரமர் திருமால் பிரமனும் முதலாய்ப்
பேசிடும் இமையோர் வந்திருக்கின்றார்
காரம மேனிக் கணபதி என்னும்
கற்பகமே! பள்ளி எழுந்தருளாயே!
7.ஓம்
செந்த்தமிழ் பாடவும் கண்துயில்வாயோ?
திருமுறை கண்டவன் ஈதுன ராயோ?
வந்தவர் போற்றிட அருள்மரு தீசர்
மாங்கனி ஞானத்தை வைத்திருக்கின்றார்
முந்திய பிள்ளை நீ அறிதுயி கொண்டாய்
முருகனோ குன்றக் குடிவரை வந்த்தான்
கந்தன் அர்ட்குமுன் வந்த்தித்தாளக்
கற்பகமே பள்ளி எழுந்த்தருளாயே!
8.ஓம்
மங்கல மாகிய மந்த்திரம் காட்ட
வந்த துதிக்கை வலஞ்சுழி பெற்றாய்
ஐங்கரந் தாங்கும் நிலையினை மாற்றி
அருள்செயப் பொழியும் இருகரம் பெற்றாய்
பங்கயம் போலொளிர் வலக்கரந் தன்னில்
பாதகம் ஆற்றிடும் மோதகம் வைத்தாய்
வெண்கன்லாம் துயர் மாற்றிடும் தேசி
விநாயகனே! பள்ளி எழுந்தருளாயே!
9.ஓம்
காகமாய் வந்தொரு கமண்டல நீரால்
காவிரி தந்தவன் கருணை தாராயோ
போகமனைத்தையும் அடியருக் காக்கிப்
புண்ணியன் அருகை புனைந்திருக்கின்றாய்
மோக சுற்றியுள் திருவடி ஞானம்
மூலாதாரத்தில்மூண்டெழச் செய்வாய்
வேகமனைத்தையும் மாற்றியும் தேசி
10.ஓம்
போற்றியுன் சேவடி போற்றியுன் நாமம்
போற்றியுன் கோவில் புரந்த்தைடும் சான்ற்றோர்
புண்ணிய போற்றியுன் சத்ர்த்தி விரதமே நோற்கும்
புண்ணியச் சான்றோர் பொன்னடி போற்றி
வீற்றிருந் தருளும் பிள்ளையார் பிள்ளையார் பட்டி
மிதித்திடும் அடியார் அடிட்தலம் போற்றி
காற்றினிலே வரும் ஓமெனும் ஓசைக்
கற்பகமே! பள்ளி எழுந்தருளாயே!
-அன்புடன் ஹீரோ ஓம்
No comments:
Post a Comment