ஓம்
பிரபோ! கணேஷ் மஹராஜ் தங்களுடைய மலர்ப்பாதம் போற்றி!
ஐயனே! உமக்கு மிக்க நன்றி.
அவனருளாலே அவன் தாள் வணங்கி என்ற தெய்வ வாசகத்திற்கிணங்க
உமது திருவருளால் தங்களைப் பற்றி எழுதும் எண்ணம் உதித்தது.உமது அருள் இல்லை என்றால் எமது சிந்தை கயிற்றில் கட்டுண்ட மாட்டினைப் போல மாயையில் கட்டுண்டு மது,மாது,போதை,வக்கிரம், போன்று எமது கர்ம வினைக்கேற்ப சுற்றி சுழலும். வீசுகின்ற கர்ம வினை என்ற புயலிலும் சிறிது இளைப்பாற நேரம் தந்து அந்த நேரத்திலும் பகவானே!உம்மை பற்றி எழுத எண்ணம் அளித்தீரே !கருணை வள்ளலே உமக்கு கோடானு கோடி நன்றி!இறைவா உலகில் உள்ள அத்தனை மொழியும்,இனமும்,கடவுளும்,உயிர்களும் நீயே உன்னை கணேஷ் மஹராஜ் என்ற சிறிய வட்டத்திற்குள் அடைத்து வழிபடுவதற்காக எம்மை மன்னிப்பாயாக!
நீ ஏகன்! அநேகன்! ராமனை அல்லாவை ஏசுவை வழிபட்டாலும் ஒரே தெய்வத்தையே வழி படுகிறோம் என்பதை அறிவோம்,எம்மதமும் தாழ்ழ்ந்ததும் இல்லை உயர்ந்தாதும் இல்லை உன்னை அடைவதற்கான ஒரு கருவியே மதங்கள்.மத சார்பற்று இருக்கிறேன்,ஆனாலும் உன்னை வழிபடுகிறேன்,காரணம் உன் வழியாகவே உலகம் அறிந்தேன் மதமே ஒரு பிரச்சனை என்பதை பிறகுதான் நான் அறிந்தேன்,அதற்காக மதத்தை விட்டு முற்றிலும் விலகியிருக்க எண்ண வில்லை காரணம் மனிதர்கள்தான் தவறு செய்கிறார்கள்,மதங்கள் அல்ல என்பதை உணர்ந்ததால்!மதங்களை உண்மையாக உள் வாங்கினால் உன்னோடு உறவாடலாம் என்பதை உணர்ந்ததால்!
ஏசு அல்லா ஹரஹர ஓம்!
ராதே
க்ருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்!
இறைவா கனவில் இம்மந்திரத்தை எனக்களித்தாய்! இதனை ஜபித்து அனேகம் பேர் நன்மை அடைய வேண்டும் என் எண்ணுகிறேன்.
மேலே உள்ள படம் ஒரு பாதி ஆதிமூர்தியான விநாயக பெருமானும் மறு பாதி அஞனை மைந்தனான ஹனுமானும் இணைந்த காண கிடைக்காத அற்புத திரு உருவம் காண விழைபவர்கள் சென்னை மத்திய கைலாஸில் ஆனந்த வேங்கடேச விநாயகர் திருக்கோவில் என்று கேட்டு செல்லவும்.
இனி வரும் பதிவுகளில் விநாயகர் மந்திரம் ஆலயம் பரிகாரம் யோகம் படம் என A டு Z செய்திகளை பதிவிடலாம்.வணக்கம்!வாழ்க வளமுடன்!
ஓம் !ஓம்! ஓம்!
அன்புடன் ஹீரோ ஓம்!
No comments:
Post a Comment