Monday, 19 March 2012

108 பாடல் த்யானம் -      பாடல்எண் -........
வாசி விநாயகா
 
ஜீவபரம ஜாதகம்
பலகீனமான உங்கள் ஜாதகத்தை பலமான ஜாதகத்துடன் இணைத்து மந்திர உச்சாடனங்களை செய்து பலம் பெறுவது
மந்த்ரா நியூமராலஜி படி பெயர் வைக்ககப்பட்டு வலுவூட்டப்பட்டது!
இது ஒருவருக்காக எங்கள் ஓமாலயாவில் டிசைன் செய்தது. 2 படம் தரப்படும்.
1.பூஜை அறையில் வைக்க வேண்டும்
2.ஐடி சைஸில் பாக்கெட்டில் வக்க வேண்டும்
பாக்கெட்டில் உள்ளதை பார்த்து நேரம் கிடைக்கும்போதெல்லம் ஜெபித்தாலும் ,கொவில்களில் வைத்து அர்ச்ஹித்தாலும் 2 ஜாதகமும் சனெச்டாகி நல்ல பலம் பெறும்,பிரஸ்னத்தில் கிடைத்த அதிர்ஷ்ட மந்திரங்களை எப்போதும் மனதில் ஜெபித்து கொண்டிருக்கலாம்.

ஓம்
வாரணத்தானை அயனைவிண்ணோரை மலர்க்கர்த்து
வாரணத்தானை மகத்துவென் றோன்மைந்தனைத்துவஜ
வாரணத்தானை துணைநயந்த் தானைவயல் அருணை
வாரணத்தானைத் திறை கொண்ட யானையை வாழ்த்துவனே!

ஓம் சிந்தித்தவர்க்கருள் கணபதி - ஜெய ஜெய
ஓம் சீரிய ஆனைக்கன்றே - ஜெய ஜெய
ஓம் அன்புடைய அமரரை காப்பாய் - ஜெய ஜெய
ஓம் ஆவித்துணையே கணபதி - ஜெய ஜெய
ஓம் இண்டைச்சடைமுடி இறைவா - ஜெய ஜெய
ஓம் ஏசன் தந்தருள் மகனே - ஜெய ஜெய
ஓம் உன்னிய கருமம் முடிப்பாய் - ஜெய ஜெய
ஓம் ஊர்நவ சந்தி உகந்தாய் - ஜெய ஜெய
ஓம் எம்பெருமானே இறைவா - ஜெய ஜெய
ஓம் ஏழுகுலகுந்த்தொழ நின்றாய் - ஜெய ஜெய
ஓம் ஐயா கணபதி நம்பி போற்றி - ஜெய ஜெய
ஓம் ஒற்றை மருப்புடைய வித்தகா - ஜெய ஜெய
ஓம் ஓங்கிய ஆனைக்கன்றே - ஜெய ஜெய
ஓம் ஔவியமில்லா அருளே - ஜெய ஜெய

ஓம் அக்கர வஸ்ட்த்து ஆனவா - ஜெய ஜெய
ஓம் கணபதி என்வினை களைவவாய் - ஜெய ஜெய
ஓம் ஙப்போர் மரு வொன்றேந்தியோய் - ஜெய ஜெய
ஓம் சங்கரன் மகனே சதுரா- ஜெய ஜெய
ஓம் ஞயநம்பினர்பா லாடிய - ஜெய ஜெய
ஓம் இடம்படு விக்கின விநாயகா - ஜெய ஜெய
ஓம் இணங்கிய பிள்ளைகள் தலைவா - ஜெய ஜெய
ஓம் தத்துவ மறை தரு வித்தகா - ஜெய ஜெய
ஓம் நன்னெறி விக்கின விநாயகா - ஜெய ஜெய
ஓம்பள்ளியிலுறைதரும் பிள்ளாய் - ஜெய ஜெய
ஓம் மன்றுளாடும் பிள்ளாய் - ஜெய ஜெய
ஓம் இயங்கிய ஞானக்குன்றே - ஜெய ஜெய
ஓம் அரவங் கிண்கிணி ஆர்ப்பாய் - ஜெய ஜெய
ஓம் இலவங் கொம்பொன்றேந்தியே - ஜெய ஜெய
ஓம் வஞ்சனை பலவும் தீர்ப்பாய் - ஜெய ஜெய
ஓம் அழகிய ஆனைக் கன்றே - ஜெய ஜெய 
ஓம் இளமத யானை முகத்தாய் - ஜெய ஜெய
ஓம் இரகுபதி விக்ன விநாயகா - ஜெய ஜெய
ஓம் அனந்த்லோ டாதியி லடி தொழ வருளே - ஜெய ஜெய
           
            ஏசுஅல்லா ஹர ஹர ஓம்!
             ராதே க்ருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்!


Sunday, 18 March 2012

வா பா வா சீர்மாகரி
ஓம்
வானுலகு மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க 
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுக நைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்.
ஓம்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
ஓம்
வாக்குண்டாம் நல்ல் மன்முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனிதும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
ஓம்
சீர் மாகரியின் செழு மமுகவா
தேர் மமகுடந் திகழ் அம்பகவா
கார் ஆகு இணைகழல் பாவியவா
பாரார் சிகரைபதி மேவியவா!

Thursday, 15 March 2012

108 கணபதி பாடல் தியானம் பகுதி -  பாடல் -  -
என் கேமராவில் பதிந்தவை R.P.OM

முற்பவத்தில் மதுர மொழி மங்களத்து 


1.ஓம்
முற்பவத்தில் யான்புரிந்த தீவினைகள்
முழுதகற்று முகத்தினானை 
அற்பசுகத் திலெனை யழுத்தா ஐங்ககரணை
பிற்பவமு மகற்றும் கோவை 
சொற்பழுது புரியாத வணிகர்குலம்
தினம் பணியும் துணைத்தாளானை
கற்பகத்தின் மிடியகற்றும் கற்பகமாம்
விநாயகனை கருத்தில் வைப்பாம்!


2.ஓம்
மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்பதத்தை
முதிரநினைய வல்லார்க்கரிதோ முகில்போல் முழங்கி
யதிரநடந்த் திடும்யானையும் தேருமதன் பின்வருங்
குதிரையும்காதங் கிழவியும் குலமன்னனே!


3.ஓம்
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
சங்கரனார் தருமதிலாய் சங்கடத்தை சங்கரிக்கும்
எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!


4.ஓம்
மண்ணகம் வளமை எய்த
மலர் தமிழ் ஆட்சி ஓங்கத்
திண்ணமாய் நாட்டில் எங்கும்
தென்றமிழ் இசையே மல்க
விண்ணவர் பணிந்து போற்றும்
விரிசடைச் செல்வர் நந்தம்
கண்ணுதற் கடவுள் தந்த
களிற்றினை பணிதல் செய்வாம்!
கற்பக விநாயகர் திருப்பள்ளி எழுச்சி
என் கேமராவின் பதிவு

1.ஓம்
 ஓமெனும் மந்திரத்ட் துட்பொரு ளானாய்
உணர்ந்தவர் நெஞ்சில் ஒளிவிளக்கானாய்
சாமியென் றுன்னை வாழ்த்திடும் அடியார்
தண்டமிழ் பாடத் தலையசைக்கின்றாய்
ஏமமும் நானே என்பது காட்டி
இடக்கரந் தன்னை இடையினில் வைத்தாய்
காமியத் தால்வரும் கவலைகள் மாற்றும்
கற்பகமே ! பள்ளி எழுந்த்தரு ளாயே! 
2.ஓம்
 வீசிய பெருஞ்செவி வேழமுகத்தாய்!
விழித்திரி அற்புத வித்தகன் ஆனாய்
தேசி விநாயகன் உன்னடி தொழவே
செந்ததமிழ்ப் பாணரும் யாழுடன் வந்தார்
பேசிய திருமுறை ஓதிய சான்றோர்
பிள்ளையுள் சந்நிதி பேணி பணிந்தார்
காசியில் மிஞ்சிய பிள்ளையார் பட்டிக்
கற்பகமே பள்ளி எழுந்தரு ளாயே!
3.ஓம்
ஒருமருப் போடும் இருசெவி கொண்டாய்
உணர்த்திடும் முக்கண் நாலுவாய் பெற்றாய்
திருவளர் அஞ்செழுத் தோதியே வைத்தாய்
சிவனுருவ்வாய் கஙை ஆறு புனைந்தாய்
இருமையும் ஆக்கிடும் ஏழிசை யானாய்
எட்டவொணா இன்பம் எட்டிட வைத்தாய்
கருவடை யாதெமைக் காத்தருள் புரியும்
கற்பகமே! பள்ளி எழுந்தருளாயே!
4.ஓம்
கதியென ந்ன்றாள் கருதிநிற்கின்ற
கணங்களினால்பெயர் கணபதி ஆச்சோ?
துதிசெயும் அடியவர் திருமுறை பாடித்
துதிக்கையினால் கரம் துதிக்கையென்னாச்சோ!
மதிதரும் மதியென வந்து
எங்கள் விதிதனை மாற்ற
கதிரென வந்தகக் காட்டினில்வளரும்
கற்பகமே! பள்ளிஎழுந்தருளாயே!
5.ஓம்
காதிடும் உந்த்தன்கருணையைக் கண்டே
கண்ணனும் ஆழியில் கந்துயில் கின்றான்
கீர்த்தி மிகுந்த்த உன் சேவையினாலே
தில்லையில் ஈசன் திருநடம் புரிவான்
வேர்த்திடும் போதினில் காத்தலில் லாயோ?
மேதினி மேல்துணை வேறினியுண்டோ?
காத்திருக்கின்றவர் கண்புனல் மாற்ற
கற்பகமே! பள்ளி எழுந்தருளாயே!
6.ஓம்
சீரமர் கொன்றைத் திருவீச ரோடும்
சிவகாமி அன்னை காத்திருகின்றால்
வாரமர் குழலாள் வடிவுடை யாளொடும்
வயிரவன் பட்டி வளரொளி நாதர்
பேரமர் திருமால் பிரமனும் முதலாய்ப்
பேசிடும் இமையோர் வந்திருக்கின்றார்
காரம மேனிக் கணபதி என்னும்
கற்பகமே! பள்ளி எழுந்தருளாயே! 
7.ஓம்
செந்த்தமிழ் பாடவும் கண்துயில்வாயோ?
திருமுறை கண்டவன் ஈதுன ராயோ?
வந்தவர் போற்றிட அருள்மரு தீசர்
மாங்கனி ஞானத்தை வைத்திருக்கின்றார்
முந்திய பிள்ளை நீ அறிதுயி கொண்டாய்
முருகனோ குன்றக் குடிவரை வந்த்தான்
கந்தன் அர்ட்குமுன் வந்த்தித்தாளக்
கற்பகமே பள்ளி எழுந்த்தருளாயே!
8.ஓம்
மங்கல மாகிய மந்த்திரம் காட்ட
வந்த துதிக்கை வலஞ்சுழி பெற்றாய்
ஐங்கரந் தாங்கும் நிலையினை மாற்றி
அருள்செயப் பொழியும் இருகரம் பெற்றாய்
பங்கயம் போலொளிர் வலக்கரந் தன்னில்
பாதகம் ஆற்றிடும் மோதகம் வைத்தாய்
வெண்கன்லாம் துயர் மாற்றிடும் தேசி
விநாயகனே! பள்ளி எழுந்தருளாயே!
9.ஓம்
காகமாய் வந்தொரு கமண்டல நீரால்
காவிரி தந்தவன் கருணை தாராயோ
போகமனைத்தையும் அடியருக் காக்கிப்
புண்ணியன் அருகை புனைந்திருக்கின்றாய்
மோக சுற்றியுள் திருவடி ஞானம்
மூலாதாரத்தில்மூண்டெழச் செய்வாய்
வேகமனைத்தையும் மாற்றியும் தேசி 
10.ஓம்
போற்றியுன் சேவடி போற்றியுன் நாமம்
போற்றியுன் கோவில் புரந்த்தைடும் சான்ற்றோர்
புண்ணிய போற்றியுன் சத்ர்த்தி விரதமே நோற்கும்
புண்ணியச் சான்றோர் பொன்னடி போற்றி 
வீற்றிருந் தருளும் பிள்ளையார் பிள்ளையார் பட்டி
மிதித்திடும் அடியார் அடிட்தலம் போற்றி
காற்றினிலே வரும் ஓமெனும் ஓசைக்
கற்பகமே! பள்ளி எழுந்தருளாயே!
-அன்புடன் ஹீரோ ஓம்





Wednesday, 14 March 2012


தி விதி மதி கதி கணபதி

ஓம்
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாமருணை கோபுரத்துள் மேவும்
செல்வக் கணபதியை கைதொழுதக் கால்!
ஓம்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர் தம்கை!
ஓம்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வெட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து
ஓம்
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சகரன் மெய்ப்பதம் போற்றுவோம்
ஓம்
ண்ணுலகத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுற
கண்ணுதல் உடையதோர் க்ளிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
ஓம்
திருவும் கல்வியும் சீருண்ட் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையை காய்க்கவும்
பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்து பிள்ளையை பேணெவாம்!
ஓம்
ணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கருமம் இல்லையே!
ஓம்
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும்
உன்திருவடி புகழ்பாடும் திறமும்
 நல் உருவும் சீலமும் ஊக்கமும்
தாழ்வுறா மனமும் தந்தெனதுள்ளத்தமர்ந்தவா
குருவும் தெய்வமுமாகி அன்பாளர்தம்
குறை தவிர்க்கும் குணப்பெரும் குன்றமே
வெருவும் சிந்தை விலக கஜானனம்
ஓம்விளங்கு சித்திபுத்தி விநாயக வள்ளலே!

Monday, 12 March 2012

சித்தர்களின் தாந்த்ரீக மந்திரங்கள்: 1
1.தேவையில்லாத பயம்,பால கிரஹ தோஷம்,துர்தேவதை சேட்டை,காய்ச்சல்,சிரசு நோய்கள்,நரம்பு நோய்கள் 

“ஓம் நமோ பகவதே
 ஐயும் கிலியும் சவ்வும் கணபதி
வசிவசி சுவாஹா

Friday, 9 March 2012

விநாயக பெருமானின் தோற்றம்:1

திருக்கயிலாயத்தில் மந்திர சித்திர மண்டபத்திற்கு பார்வதி தேவியுடன் பரமேஸ்வரர் எழுந்தருளினார்.அங்கே 7 கோடி மந்திர சித்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.அவற்றின் நடுவில் ஆடி மூர்த்தியான விநாயக பெருமான் சமஷ்டி பிரணவமாகாவும் வியஷ்டி பிரணவமாகவும் வீற்றிருந்தார்.பார்வதி தேவியும் பரமேஷ்வரணூம் பலகாலமாக நாமெல்லாம் தவம் செய்யும் இந்த பிரணவ மூர்த்தியான பர பிரம்மம் நமக்கு பிள்ளையாக அவதரித்தால் எப்படி இருக்கும் என சத எண்ணி வந்தனர்.அவர்களது எண்ணத்தை உள்வாங்கிகொண்டு பிரணவம் யானை முகமுடைய கடவுளாக அவதரித்தது!
 கடவுளாயினும்  ஆயினும் பெற்ற தாய் தந்தையர்க்கு குழந்தை அல்லவா!அக்குழந்தை இருவரின் கால்களிலும் விழுந்து ஆசி பெற்றது.மாதுளம்பூ நிறம் உடைய அக்குழவியை  அம்மையும் அப்பனும் உச்சி முகர்ந்து ,உள்ள களிப்புடன் ஐயனே! நீர் பர பிரம்மம் எமக்கு புதல்வராய் வாய்த்தமைக்கு உமக்கு நன்றி.இடையூறு களையும் ஏந்தலே! கணங்களின் தலைவனே! இன்று முதல் நாங்கள் உம்மை கணபதி என்றும் கணேசன் என்றும் அழைத்து மகிழ தாங்கள் சம்மதிக்க வேண்டும் என்று வினவ அந்த தெய்வ குழந்தை தாயே! தந்தையே! நான் கடவுளே ஆயினும் உமக்கு பிள்ளை ஆதலால் எம்மை முழுக்க முழுக்க பிள்ளையகாவே பாவிக்கவும்,தெய்வம் என்ற நோக்கில் பார்த்தால் நமக்கு இடையே உள்ள பந்தம் சற்று விலகி செல்கிறது!எமக்கு நீங்கள் இட்ட பெயர் சம்மதமே!எண்று கூறி பிரணவ ஓசையுடன் புன்னகைத்தது!

Thursday, 8 March 2012

பிரபு கணேஷ் மஹராஜனுக்கு நன்றி!

ஓம்


பிரபோ! கணேஷ் மஹராஜ் தங்களுடைய மலர்ப்பாதம் போற்றி!
ஐயனே! உமக்கு மிக்க நன்றி.
அவனருளாலே அவன் தாள் வணங்கி என்ற தெய்வ வாசகத்திற்கிணங்க
 உமது திருவருளால் தங்களைப் பற்றி எழுதும் எண்ணம் உதித்தது.உமது அருள் இல்லை என்றால் எமது சிந்தை கயிற்றில் கட்டுண்ட மாட்டினைப் போல மாயையில் கட்டுண்டு மது,மாது,போதை,வக்கிரம், போன்று எமது கர்ம வினைக்கேற்ப சுற்றி சுழலும். வீசுகின்ற கர்ம வினை என்ற புயலிலும் சிறிது இளைப்பாற நேரம் தந்து அந்த நேரத்திலும் பகவானே!உம்மை பற்றி எழுத எண்ணம் அளித்தீரே !கருணை வள்ளலே உமக்கு கோடானு கோடி நன்றி!இறைவா உலகில் உள்ள அத்தனை மொழியும்,இனமும்,கடவுளும்,உயிர்களும் நீயே உன்னை கணேஷ் மஹராஜ் என்ற சிறிய வட்டத்திற்குள் அடைத்து வழிபடுவதற்காக எம்மை மன்னிப்பாயாக!
நீ ஏகன்! அநேகன்! ராமனை அல்லாவை ஏசுவை வழிபட்டாலும் ஒரே தெய்வத்தையே வழி படுகிறோம் என்பதை அறிவோம்,எம்மதமும் தாழ்ழ்ந்ததும் இல்லை உயர்ந்தாதும் இல்லை உன்னை அடைவதற்கான ஒரு கருவியே மதங்கள்.மத சார்பற்று இருக்கிறேன்,ஆனாலும் உன்னை வழிபடுகிறேன்,காரணம் உன் வழியாகவே உலகம் அறிந்தேன் மதமே ஒரு பிரச்சனை என்பதை பிறகுதான் நான் அறிந்தேன்,அதற்காக மதத்தை விட்டு முற்றிலும் விலகியிருக்க எண்ண வில்லை காரணம் மனிதர்கள்தான் தவறு செய்கிறார்கள்,மதங்கள் அல்ல என்பதை உணர்ந்ததால்!மதங்களை உண்மையாக உள் வாங்கினால் உன்னோடு உறவாடலாம் என்பதை உணர்ந்ததால்!

ஏசு அல்லா ஹரஹர ஓம்!
ராதே 
க்ருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்!

இறைவா கனவில் இம்மந்திரத்தை எனக்களித்தாய்! இதனை ஜபித்து அனேகம் பேர் நன்மை அடைய வேண்டும் என் எண்ணுகிறேன்.
மேலே உள்ள படம் ஒரு பாதி ஆதிமூர்தியான விநாயக பெருமானும் மறு பாதி அஞனை மைந்தனான ஹனுமானும் இணைந்த காண கிடைக்காத அற்புத திரு உருவம் காண விழைபவர்கள் சென்னை மத்திய கைலாஸில் ஆனந்த வேங்கடேச விநாயகர் திருக்கோவில் என்று கேட்டு செல்லவும்.
இனி வரும் பதிவுகளில் விநாயகர் மந்திரம் ஆலயம் பரிகாரம் யோகம் படம் என A  டு Z  செய்திகளை பதிவிடலாம்.வணக்கம்!வாழ்க வளமுடன்!
ஓம் !ஓம்! ஓம்!

அன்புடன் ஹீரோ  ஓம்!