Friday, 13 April 2012


ஆனை முகத்தான்







கaliamurthy Twad

ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன்ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன்ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் அவன்ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன்ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்ஆஆஆஆஆஆஆஆஆஆ

ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான் தன்னைநம்பியவர்க்கெல்லாம் கை கொடுப்பான் தன்னைநம்பியவர்க்கெல்லாம் கை கொடுப்பான் உடன்

ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன்ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்ஆஆஆஆஆஆஆஆஆஆ

ஓமெனும் பிரணவ நாதமே அவன் தொடக்கம்உலகமெல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்ஓமெனும் பிரணவ நாதமே அவன் தொடக்கம்உலகமெல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்கானல் நீர் வாழ்க்கை கடலதனைக் கடக்கும்கானல் நீர் வாழ்க்கை கடலதனைக் கடக்கும்தோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்தோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்

ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன்ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

வெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடியிருப்பான்வீதி தோறும் நின்றே வேண்டும் வரம் அளிப்பான்வெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடியிருப்பான்வீதி தோறும் நின்றே வேண்டும் வரம் அளிப்பான்அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்ஐங்கரத்தான் அவன் தான் அனைத்திற்கும் முன்னிற்பான்ஐங்கரத்தான் அவன் தான் அனைத்திற்கும் முன்னிற்பான்

ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன்ஆறுமுகத்தானுடன் அவதரித்தான் அவன்ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான் மகன்ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்ஆஆஆஆஆஆஆஆஆஆ



Kaliamurthy Twad

ஸ்ரீ கணேச சுப்ரபாதம் -பாடல் 14 

மாற்றுரைத்த விநாயகர் நீ 



மதிக்கின்ற ஆரூரில் 


மனங்கவரும் கற்பகம் நீ 


பிள்ளையார்பட்டி தனில்


போற்றுகின்ற கணபதி நீ
பொள்ளாச்சி ஈச்சனாரி
புகழ்நுரையால் கணபதி நீ
புகலுகின்ற வலஞ்சுழியில்

ஏற்றுகின்ற மதுரையில் நீ


முக்குறுணிப் பிள்ளையாரே
எழில்மிகுந்த புதுவையிலோ
மணக்குளத்து விநாயகர் நீ

சாற்றுகின்றோம் கவியுனக்கு

தவ சுப்ரபாதம்
சகல நலம் தருபவனே
நற்காலையாக!



ஸ்ரீ கணேச சுப்ரபாதம் -பாடல் 13 

ஒரு சுற்று உனைச்சுற்றி 


உடன்வந்தால் போதுமென்பாய்

இருகுட்டு நெற்றியிலே 

இட்டாலும் அருள்புரிவாய் 


ஈரிரண்டு தோப்புக்கரணம் 

போட்டாலும் மகிழ்ந்திடுவாய்
 
யாரிங்கு உனைப்போலே 

யானைமுகப் பெருமானே 

பேருனக்கு ஈரெட்டு 

பெருமையுடன் கூப்பிடுவோம்

அருகம்புல் மாலையிட்டு
 
அடிபோற்றி வணங்கிடுவோம் 

ஊரெங்கும் உறைபவனே! 

தவசுப்ரபாதம் 

உமையம்மை தவப்புதல்வா! 

நற்காலையாக!


ஸ்ரீ கணேச சுப்ரபாதம் -பாடல் 12 


கணபதிக்கு ஒருசமயம்
 
காணாபத்யம் என்பர்
 
கணபதியின் தந்தைக்கு
 
சைவம் என உரைத்திடுவர்

கணபதியின் தம்பிக்கோ
 
கௌமாரம் எனப் புகல்வ



கணபதியின் அன்னைக்கு
 
சாக்தம் என மொழிந்திடுவர் 

கணபதியின் மாமனுக்கு 

வைணவம் எனச் சொல்


காலைஎழும் கதிருக்கோ

சௌரம் எனச் செப்பிடுவர்

கமண்டலத்தைக் கவிழ்த்தோனே!

தவ சுப்ரபாதம்
 
காவிரியைத்

 தந்தவனே! 

நற்காலையாக!



ஸ்ரீ கணேச சுப்ரபாதம் -பாடல் 11 

கரும்புபல படைத்திடுவோம்
 
கணபதியே !நீ என்றும்
 
விரும்புகின்ற இளநீரும் 

வேண்டுமட்டும் தந்திடுவோம் 

அருமைநிறை பயறுவகை
 
அப்பம் எள் தேன் பழங்கள்
 
சர்க்கரை பருப்புடன் நெய்
 
சகலமும் உனக்களிப்போம் 

பொரிஉடனே அவல்கடலை
 
பொன்னிறத்துக் கொழுக்கட்டை
 
போதாது என்பதனால் 

மோதகமும் படைத்திடுவோம் 

பெருவயிறு கொண்டவனே 

தவ சுப்ரபாதம்

பிறப்பறுக்கும் பெரியோனே 

நற்காலையாக!






ஸ்ரீ கணேச சுப்ரபாதம் -பாடல் 10 .

துதிக்கை எனுங்கை

படைத்தலைக் குறிக்கும்

தோன்றும் மோதகக்கை

காத்தலைக் காட்டும்

 அதிசய அங்குசக்கை

அழித்தலைப் பேசும்

அடுத்தொரு பாசக்கை

மறைத்தலைக் குறிக்கும்

 துதிக்கும் தந்தக்கை

அருளளைக் குறிக்கும்

தொந்தி வயிற்றோனின்

தொடரும் பெருமையிவை

 மதிசூடும் முன்னவனே

தவசுப்ரபாதம்

மனமுருகிப் பணிகின்றோம்

நற்காலையாக!




கணேச சுப்ரபாதம் -பாடல் ஒன்பது 

விடியலில் எழுவோம் 

விழிகளைத் திறப்போம் 

வேழ முகத்தவனின்

 பாடலைப் படிப்போம் 

கடிதேகும் வினைகள் 

கவலைகள் தீரும்

 கண்ணியம் சேரும் 

காரியம் கூடும்! 

முடியாது எனுஞ்சொல்

 முழுதும் வராது !

முழுமுதற் கடவுள்

 முன்னின்று காக்கும்! 

பிடியுங்கள் அந்தப் 


பிள்ளையார்ப் பாதம்!

 படியுங்கள் இதுதான் பரமனின் வேதம் !


கணேச சுப்ரபாதம் -பாடல் எட்டு 


திருப்பரங்குன்றம் முருகனுக்கு

 திருவண்ணாமலை கணபதிக்கு 

திருச்செந்தூரோ கந்தனுக்கு 

திருமுதுகுன்றம் அண்ணனுக்கு 



திருவாவினன்குடியோ பாலனுக்கு

 திருக்கடவூரோ கணபதிக்கு

திருவேரகமோ இளவலுக்கு 

தென்மதுரை வீடோ அண்ணனுக்கு 

திருத்தணிமலையோ குமரனுக்கு

பிள்ளையார்ப்பட்டி கணபதிக்கு

 பழமுதிர் சோலை பாலனுக்கு 

திருநாரையூரோ அண்ணனுக்கு 

திருமுருகன் சோதரனே!

 தவசுப்ரபாதம்

 தினமுன்னைப் பணிகின்றோம்

 நற்காலையாக !


 கணேச சுப்ரபாதம் -பாடல் ஏழு 

எச்செயலைச் செய்தாலும் 

எந்தஊர் சென்றாலும் 

மெச்சியுன் பதம்பணிந்தே

மென்மேலும் சென்றிடுவோம்! 

அச்சிறுத்தாய் விநாயகா 

அரனவனின் தேரினிலே

அது எதற்கு என்றாலோ 

அவர் வணங்க மறந்தமைக்கு! 

இச்சைஎலாம் நிறைவேற்றும்

இனிதான கணபதியே !

இச்சகத்தில் உனையன்றி 

இறைஏது எமக்கைய்யா! 

 நச்சரவம் பூண்டவனே 

தவசுப்ரபாதம் நற்றாளைப்

பணிகின்றோம் நற்காலையாக!



கணேச சுப்ரபாதம் -பாடல்


அல்லல்போம் என்றுன்னை

 அறிந்தவர்கள் சொன்னார் 

வல்வினைபோம் என்றுன்னை 

வணங்கியவர் சொன்னார் 

துயரம்போம் என்றுன்னைத்

 தொடர்ந்தவர்கள் சொன்னார் 

தொல்லைபோம் என்றுன்னைத்

தொழுதவர்கள் சொன்னார்

நல்லகுணம் அதிகமென்று

 நாட்டோர்கள் சொன்னார் 

வெல்லுமனம் கூடுமென்று

வேண்டியவர் சொன்னார் 

செல்லப் பிள்ளையாரே!

தவ சுப்ரபாதம் சேவடியில்

தலைவைத்தோம்

நற்காலையாக!


கணேச சுப்ரபாதம்


மலைமகள் அன்னையின் 

மடிதவழ்க் குழந்தாய்!

மலைபோல் வருந்துயர் 

மாய்த்திட வருவாய்!

மலையினில் பாரதம் 

மகிழ்வுடன் வரைந்தாய்!

கலையெலாம் கருத்துள் 

கனிவுடன் வளர்ப்பாய் !

உலகெலாம் உன்றன் 

உந்தியில் கொள்வாய் !

அலகிலா ஆடல்கள்

அவனியில் புரிவாய்
 !

நலந்தரும் நாயக!

தவ சுப்ரபாதம் !

நாயகா!விநாயகா!

நற்காலையாக!


கணேச சுப்ர பாதம் 4


 யானையை உரித்தோன்

அருமை மிகு தந்தை!

யானையை காத்தோன்


பெருமை மிகு மாமன்!

யானையால்

தம்பிக்கு வள்ளியை ஈந்தாய்!

யானை முக அசுரனை 

போரிட்டே வென்றாய்!

யானையாய் ஔவையை

கயிலையில் சேர்த்தாய்!

யாவையும் தருபவர்

யாரே உனைப்போல்! 

யானை முகத்தோனே

 தவ சுப்ரா பாதம்

யாமுனை பணிந்தோம்

நற்காலையாக!-


கணேச சுப்ரபாதம்


திருமகனே!திருமகளின் மருமகனே!

தேவதேவே !திருமுருகன் சோதரனே !

திங்கள்முடி தரித்தோனே!

 கருமமெலாம் கைகூட்டும் கடவுள் நீ!

கணபதி நீ!

பருவமென உளம்பழுக்கும்பக்குவம்

 அருளிடவா!


 பெருவாக்கு அருள்வோனே!

பெருச்சாளி வாகனனே !



பீடுமிகத் தருகின்ற பிள்ளையார்

 நீயன்றோ?


 ஒருகொம்பை ஒடித்தவனே!தவ சுப்ரபாதம் !

உருவாக்கும் உத்தமனே!நற்காலையாக!


கணேச சுப்ரபாதம் 1


வேழ முகங்கொண்ட விநாயக

பெருமானே !

வெற்றிகள் தருபவனே !

வினையெல்லாம் தீர்ப்பவனே !

பேழை வயிறு கொண்ட பிள்ளையார்ப்

பெருமானே!


பேறுபல தந்தெமக்கு

பெரும்புகழை அளித்திட வா!

ஏழைக்கு அருள்செய்ய எப்போதும் வருபவனே !
ஏங்கிநிற்கும் குழவிபோல் இருக்கின்றோம்

உனைநோக்கி !



வாழ்விக்கும் வள்ளலே !

தவ சுப்ரபாதம் !

வணங்குகிறோம் உன்னடியை !

நற்காலையாக!



கணேச சுப்ரபாதம் 2


ஐந்து கரம் கொண்ட ஆனை முகத்தவனே !

அரவை அணிகலனாய் அரையில்

அணிந்தவனே !

இந்தின் இளம்பிறையாம்எயிறு கொண்டவனே!

ஈசன் திருக்குமரா !இனிய உமை தவப்புதல்வ !

நந்தி மகனுன்னை நாளும் பரவிடுவோம்
;
வந்த வினை யாவும் வந்தவழி ஓட்டிடுவாய் !

புந்தியில் உறைபவனே !

தவ சுப்ரபாதம் !

பொன்னடி பணிகின்றோம்!

 நற்காலையாக.