Sunday, 17 June 2018

காலத்தை கணிக்கும் வழி – பைரவர் வழிபாடு

காலத்தை கணிக்கும் வழி – பைரவர் வழிபாடு (இன்று தேய்பிறை அஷ்டமி)

ஒரு மனிதன் எப்படிக் காலத்தைக் கணிக்க வேண்டும். கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் இக்கேள்வியின் பின்னால் ஆழ்ந்த கருத்து உண்டு. எல்லோரும் கடிகாரத்தை வைத்துத்தானே காலத்தைக் கணக்கிட வேண்டும் என்று பதில் கூறுவர். உண்மையில் கடிகாரம், மர நிழல், சூரியனின் இயக்கம் போன்ற எந்த வெளிப்படையான உபகரணங்களை வைத்தும் காலத்தை கணக்கிடுவது உண்மையான ஆன்மீகம் அல்ல என்பதே சித்தர்களின் கூற்று. நமது முன்னோர்கள் காலத்தை எப்படிக் கணக்கிட்டனர்.

ஒரு நாளின் பகல் பொழுதை எட்டு முகூர்த்தங்களாகவும் இரவு நேரத்தை எட்டு முகூர்த்தங்களாகவும் கணக்கிட்டனர். ஒரு முகூர்த்தத்திற்கு ஒன்றரை மணி நேரம் என்றால் 16 முகூர்த்த நேரத்திற்கு 24 மணி நேரமான ஒரு நாள் அமைந்தது. இந்த ஒன்றரை மணி நேர முகூர்த்தத்தை அவர்கள் அளப்பதற்கு எந்தக் கருவியை வைத்திருந்தார்கள்?

ஒவ்வொருவரும் தங்கள் மூச்சின் அளவைக் கொண்டுதான் அக்காலத்தில் கால அளவைக் கணக்கிட்டார்கள். இதுவே உண்மையான கால அளவு கோல். நாம் உறங்கினாலும் உறங்காவிட்டாலும் நின்றாலும் நடந்தாலும் சுவாசித்துக் கொண்டேதான் இருக்கிறோம், இந்த சுவாசம் காலையில் நாம் எழுந்தவுடன் பொதுவாக வலது நாசியில் ஆரம்பிக்கும். ஒரு முகூர்த்த நேரம் கழித்து அதாவது ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் இடது மூக்கிற்கு மாறும். அடுத்த முகூர்த்தத்தில் வலது நாசிக்கு மாறிவிடும்.

அக்காலத்தில் நமது முன்னோர்கள் ஒரு நாளின் நேரத்தை இவ்வாறு தங்கள் நாசியில் ஓடூம் சுவாசத்தின் போக்கை வைத்துதான் நேரத்தைக் கணக்கிட்டார்கள். மேலும் ஒவ்வொரு முகூர்த்தத்திலும் நான்கு பூதக் கலைகள் மாறி மாறி சுழன்று வரும். அதாவது பிருத்பி, அப்பு, அக்னி, வாயு என்ற வரிசையில் ஒவ்வொரு பூதக் கலையுடைய சுவாசமும் ஒரு நாழிகை நேரத்திற்கு அதாவது 24 நிமிடங்களுக்கு நிரவி நிற்கும்.

ஒவ்வொரு சுவாசக் கலையிலும் செய்ய வேண்டிய காரியங்களை நம் முன்னோர்கள் தங்கள் சற்குரு நாதர்கள் மூலம் தெளிவாக தெரிந்து வைத்திருந்தனர். உதாரணமாக, வலது நாசி சுவாசத்தில் மலம் கழிப்பதும், இடது நாசி சுவாசத்தில் சிறுநீர் கழிப்பதும், நீர் அருந்துவதும் நலம், ஆண்கள் வலது நாசி சுவாசத்திலும், பெண்கள் இடது நாசி சுவாசத்திலும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமுள்ள சந்ததிகளைத் தோற்றுவிக்க வழி வகுக்கும்.

ராம பாணத்தைத் தடுக்க எவராலும் இயலாது என்பது அனைவரும் அறிந்ததே. காரணம் ராம பிரான் தன்னுடைய ஒவ்வொரு பாணத்தையும் வலது சுவாசத்தில் பிருத்வி பூதம் நிலை கொள்ளும்போது விடுத்ததே ஆகும். சூரிய கலையில் பிருத்வி பூதம் நிலை கொண்டால் அப்போது எழும் பாணத்தை யாராலும் தடுக்க இயலாது என்று தனுர் வேதம் உறுதி அளிக்கிறது.

இவ்வாறு நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையை நம்முடைய சுவாசத்துடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதுதான் உண்மையான கால பைரவ வழிபாடாகும். பைரவ மூர்த்தங்கள் அஷ்ட பைரவ மூர்த்திகள் என எட்டு வடிவங்களில் திகழ்கிறார்கள் அல்லவா? சீர்காழி, திருக்குற்றாலம் சித்திரசபை, திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் இத்தகைய அஷ்ட பைரவ மூர்த்திகளின் திருஉருவங்களைத் தரிசிக்கலாம்.

பகலிலும் இரவிலும் நிரவி நிற்கும் எட்டு முகூர்த்தங்களுக்கும் ஒவ்வொரு முகூர்த்தத்திற்கும் ஒரு மூர்த்தியாக இந்த அஷ்ட பைரவ மூர்த்திகள் அதிபதியாகத் திகழ்கின்றனர். அந்தந்த முகூர்த்தத்திற்கு உரிய பைரவ மூர்த்தியை முறையாக வழிபட்டு வந்தால் அதுவே சிறந்த அஷ்ட பைரவ வழிபாடாக மலரும்.

மேலும் எந்த அளவிற்கு கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் கணக்கிடும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய ஆயுள் குறையும் என்பது உண்மை. கேட்பதற்கு விந்தையாகத் தோன்றினாலும் இதுவே உண்மை என்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ளலாம். நாம் தினசரி காலை 10 மணிக்கு அலுவலகம் செல்வதாக வைத்துக் கொள்வோம். அதற்காக ஒருவர் 9 மணிக்குள் பஸ்சை பிடித்தால்தான் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியும் என்றிருந்தால் அவர் காலை எழுந்ததிலிருந்து பல் துலக்குதல், குளித்தல், பூஜை செய்தல், உணவு ஏற்றல் என்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே செய்யும்போது அவரையும் அறியாமல் அவருடைய மூச்சின் வேகம் அதிகரிக்கிறது.

இதனால் ஒரு நிமிடத்தில் விடும் மூச்சுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவருடைய ஆயுள் ஓரளவு நாளடைவில் குறைந்து விடும். வருடம், மாதம் என்ற கணக்கில் நமது ஆயுள் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவருடைய ஆயுளும் இத்தனை ஆயிரம், லட்சம் சுவாசம் என்ற கணக்கில்தான் இறைவனால் நிச்சயிக்கப்படுவதால் எந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழும் நம் சுவாசத்தின் எண்ணிக்கை குறைகிறதோ அந்த அளவிற்கு நமது ஆயுளும் வளரும் என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறது அல்லவா?

மனிதன் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 15 முதல் 20 மூச்சுகள் விடுகிறான். ஆனால், நான்கு நிமிடத்திற்கு ஒரு முறையே சுவாசிப்பதால் அது ஆயிரம் வருடத்திற்கு அமைதியாக உயிர் வாழ்கிறது.

சில வகை ஆமைகள் பத்தாயிரம் வருடங்கள் கூட உயிர் வாழும் தன்மை உடையவை. அவை தங்கள் தலையை வெளியே இழுப்பதற்கு இரண்டு ஆண்டுகளும், தாங்கள் கால்களை வெளியே வைப்பதற்கு ஐந்து ஆண்டுகளும் எடுத்துக் கொள்ளும் என்றால் அவைகளின் சுவாசம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒரு நாளில் நாம் நிறைவேற்ற வேண்டிய காரியங்களை வைத்து மட்டும் நமது காலத்தை அளக்க, வாழ்வை நடத்த பழகிக் கொண்டால் சுவாசம் சீராக இயங்கும், அதனால் ஆயுள் வளரும் என்பதே சித்தர்ளின் அறிவுரை,

அதாவது, காலை ஆறு மணிக்கு எழ வேண்டும், ஏழு மணிக்கு குளிக்க வேண்டும், எட்டு மணிக்கு சாப்பிட வேண்டும், ஒன்பது மணிக்கு பஸ் பிடிக்க வேண்டும் என்ற மணிக் கணக்கு வாழ்க்கையை விடுத்து, காலையில் சூரிய உதய நேரத்தில் எழ வேண்டும், அதன் பின் குளித்து, பூஜை செய்து விட்டு, உணவருத்திய பின் பஸ் பிடித்து அலுவலகம் செல்ல வேண்டும் என்ற காரிய அட்டவணையை மட்டும் நாம் கருத்தில் கொண்டு செயல்பட்டால் எந்த வித ஆர்ப்பாட்டம், ஆரவாரமின்றி நமது வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடைபோல் தவழும் என்பது நமது பெரியோர்கள் கண்ட உண்மை. ஆரம்பத்தில் இது நடை முறைக்கு ஒத்து வராததுபோல் தோன்றினாலும் விடாமுயற்சியுடன் இம்முறையை மேற்கொண்டு செயல்படுத்தினால் நிச்சயம் அமைதி தவழும் உலகம் உங்களுக்காக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த காரிய அட்டவணையை கருத்தில் கொண்டு செயல்படுத்திய பின் நமது சுவாசக் காற்றை ஆதாரமாக வைத்து நமது காரியங்களைச் செயல்படுத்தும் வித்தையை எளிதாகக் கற்றுக் கொண்டு விடலாம். இந்த முகூர்த்தத்தில் இந்த பூத தத்துவத்தில் இந்தக் காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து அக்குறிப்பிட்ட காலத்தில் அதை நிறைவேற்றி விடலாம். அவ்வாறு காரிய அட்டவணையை சுவாச சுழற்சியின் அட்டவணையின் பின்னணியில் நீங்கள் செயல்படுத்தும் முறையை அறிந்து கொண்டால் அப்போது காலம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். அதாவது நீங்கள் காலத்தைக் கட்டுப்படுத்தலாம், காலம் உங்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது.

இந்த அற்புதத்தை நடைமுறையில் நடத்திக் காட்டியவர்களே நமது ரிஷிகளும் யோகிகளும். மகாபாரத யுகத்தில் திதி என்னும் காலக் கோட்பாடான அமாவாசையை ஸ்ரீகிருஷ்ண பகவான் இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் மாற்றி அமைத்தார்.

இவ்வாறு காலத்தின் கட்டுப்பாட்டைக் கடந்தவர்களே காலத்தை உருவாக்க முடியும், பகல் இரவை மாற்றி அமைக்க முடியும். இந்த வித்தையை அறிந்ததால்தான் பராசரர் பகல் நேரத்தில் இரவு காலத்தைத் தோற்றுவித்து தன்னுடைய தபோ பலனை வியாச பகவான் உருவத்தில் உலகிற்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.

இவ்வாறு காலத்தைக் கட்டுப்படுத்தும் வித்தை கேட்பதற்குச் சுவையாக, எளிமையாகத் தோன்றினாலும் நடைமுறையில் மிகவும் கடினம் என்று பலரும் கருதுவதால் கால பைரவ வழிபாட்டை உலகிற்கு ரிஷிகள் அளித்துள்ளனர். தர்ம தேவதையான நாயை வாகனமாகக் கொண்ட பைரவ மூர்த்தியை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் காலத்தை வெல்லும் வித்தையை நமக்கு சுவாமி அறிவுறுத்துவார்.

மேலும் விரைவாக அருகி வரும் வேத சக்திகள் தழைப்பதற்கு உறுதுணை செய்வதும் பைரவ வழிபாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோருக்கும் வேதம் ஓதுதல் என்பது சாத்தியமானது கிடையாது. ஆனால், யாராக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் பைரவ மூர்த்தியை வழிபடுவதும் நாய்களுக்கு உணவிடுவதும் சாத்தியமானதே. இதனால் வேத சக்திகள் பெருகி உலகில் தர்மம் கொழிக்கும். இவ்வுண்மையை உணர்த்தவே வேதநாயகனான சிவபெருமான் நான்கு வேதங்களை நான்கு நாய்களாக்கி ஆதி சங்கரருக்கு காசியில் வேதத்தின் உண்மைப் பொருளை விளக்க வந்தார். நாமும் தொடர்ந்து பைரவ வழிபாட்டை மேற்கொண்டு நல்வழியை இறை அருளால் பெறுவோம்.

Saturday, 3 January 2015

மருத்துவம் பரிகாரம் தியானம் இலவசம் ஓமாலயஜெய் ஜெய் கணேசா ஜெப வங்கி மக்கள் நல ஜெபக்கூடம் 9789820638 .



ஓமாலயா ஜெய் ஜெய் கணேசா ஜெப வங்கி மக்கள் நல ஜெபக்கூடம் 9789820638        .
தயிர்வடையும் மருத்துவமும்
ஆண்மைக்கு நல்லது வயிற்றுப்புண்ணை ஆற்றும்,
பித்தத்தை குறைக்கும்.உடலுக்கு பலம் தரும்,
மலசிக்கலை போக்கும்,பெண்களுக்கு போஷாக்கு
ஆனால் சுவாச கோளாறு உள்ளவர்கள்
அடிக்கடி உணண்க்கூடாது.உறக்கம் தரும்.
நரம்புகளை ஆற்றுபடுத்தும்
 மருத்துவம் பரிகாரம் தியானம் இலவசம்

Tuesday, 2 December 2014

அட்சய திருதியை ஜய’ வருடம், கார்த்திகை மாதம் 20ம் நாள் (6.12.14), மார்கழி 19ம் நாள் (3.1.15) ஆகிய நாட்கள் தங்க கணபதி தினமாக அமைகின்றன

தங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்!
க.காந்தி முருகேஷ்வரர்
ட்சய திருதியை அன்று தங்க நகைகள் வாங்கினால், மேலும் மேலும் தங்கம் சேரும் என்பது நம்பிக்கை. வைகாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) திருதியை திதியைத்தான் அட்சயதிருதியை  என்கிறோம். இது வருஷத்துக்கு ஒருமுறைதான் வரும்.
இந்த தினத்தைப் போன்றே, தங்க ஆபரணங்கள் செய்து அணிவதற்கு ஏற்ற மற்றொரு புண்ணிய தினமும் உண்டு. அதை, முழுமுதற் கடவுளான விநாயகரின் திருப்பெயரால் 'தங்க கணபதி தினம்’ என்றே சிறப்பித்திருக் கிறார்கள் நம் முன்னோர். இந்த தினம், வருடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை வரும் என்பது கூடுதல் சிறப்பு!
தங்கத்தை விரும்பாத மனிதனே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் தங்கத்தின்மீது பற்று உண்டு. வெறும் அழகு ஆபரணங்களாக மட்டுமே இல்லாமல், சேமிப்புக்குத் தகுதியான பொருள் அது. அவசர கால பொருளாதாரத் தேவைக்கும் தங்கம் பயன்படும். அப்படிப்பட்ட தங்கத்தைச் சேமிக்கவும், சிறுகச் சிறுக சேமித்து தங்க ஆபரணங்கள் வாங்கி அணிந்து மகிழவும் உகந்த தினம்தான் தங்க கணபதி தினம்.
பொதுவாக தங்கம் வாங்கி அணிவதற்குத் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைளும், பிரதமை, பெளர்ணமி, சஷ்டி, ஏகாதசி, பஞ்சமி, தசமி ஆகிய நாட்களும் சிறப்பானவை என்கின்றன ஞானநூல்கள். அதிலும், குறிப்பிட்ட இந்த நாட்களில் அமிர்தயோகம் மற்றும் சுக்ர ஹோரைகளில் புதிய ஆபரணம் அணிவதால், ஆபரண யோகம் பெருகும்.
இதுபோன்று பலன் அருளும் புண்ணிய தருணங்களை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்கள் நம் முன்னோர். முற்கால அரசர்கள் பலரும், சாஸ்திர அறிஞர்கள் அறிவுறுத்தும் இந்தத் தருணங்களில் கிரீடமும், நகைகளும் செய்து அணிந்து பலன் பெற்றிருக்கிறார்கள். அப்படியான ஒரு சிறப்புத் திருநாள்தான் தங்க கணபதி தினம்.
ரோகிணி நட்சத்திரம், சனிக்கிழமை, அமிர்தயோகம் மூன்றும் கூடி வரும் தினத்தையே தங்க கணபதி தினமாக அனுஷ்டித்திருக்கிறார்கள்.
சரி, தங்கத்துக்கும் கணபதிக்கும் என்ன சம்பந்தம்?
எதிலும் முன்னோரைச் சிறப்பிப்பது நமது பண்பாடு. அந்த வகையில், உலக உயிர்களுக்கெல்லாம் முன்னவராகவும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் முதற்கடவுளாகவும் விளங்கும் கணபதி பெருமானுக்கு பூஜைகளில் முதலிடம் உண்டு. அவ்விதமே, அவரின் திருப்பெயரை இந்தப் புண்ணிய தினத்துக்குச் சூட்டியதாகத் தகவல் உண்டு.
நிகழும் 'ஜய’ வருடம், கார்த்திகை மாதம் 20ம் நாள் (6.12.14), மார்கழி 19ம் நாள் (3.1.15) ஆகிய நாட்கள் தங்க கணபதி தினமாக அமைகின்றன. இந்த தினங்களில் புதிய தங்க நகையைச் செய்யச் சொல்லி அணிந்தால், பெரும் செல்வம், செல்வாக்கு, புகழ் கூடுவதோடு, பரம்பரை பரம்பரையாகச் சேர்த்த செல்வமும் நிலைக்கும் என்பது ஐதீகம்.
மேலும், இந்தப் புண்ணிய தினங்களில், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, 'ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம’ என 108 முறை பாராயணம் செய்து, விநாயகர் கோயிலுக்குச் சென்று, கணபதியைத் துதித்து அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுங்கள். இதனால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, கல்வி மேம்பாடு, ஆரோக்கியம், ஐஸ்வர்யம், புதிய முயற்சிகளில் வெற்றி, தொழிலில் லாபம் என சகல விஷயங்களும் சாதகமாகும்; பிரச்னைகள் விலகி, வாழ்க்கை இனிக்கும்!

- நன்றி விகடன்

Wednesday, 17 April 2013

விநாயக பெருமானின் முப்பத்திரெண்டு திருவுருவங்கள்:

விநாயக பெருமானின்  முப்பத்திரெண்டு திருவுருவங்கள்:


1.ஸ்ரீபால விநாயகர் "- குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி;நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம்,ஒன்றில் மாம்பழம்,ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம்,துதிக் `கை'யில் அவருக்கு பிடித்த கொழக்கட்டை.

2.ஸ்ரீ தருண விநாயகர் : இளமை பொங்கும் அழகிய இளைஞனாக,ஒடிந்த தந்தம்,விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம், நெற்கதிர்,நாவற்பழம்,மோதகம் தாங்கிய எட்டு கைகளும் கொண்ட சிவந்த மேனியர்.

3.ஸ்ரீ பக்தி விநாயகர் : அறுவடை கால முழ நிலவு போல் ஒளிரும் சாம்பல நிற மேனியர்; வாழைப்பழம், மாம்பழம்,தேங்காய்,கிண்ணம் நிறைய பாயசம் கொண்ட நான்கு கைகள்.

4.ஸ்ரீ வீர விநாயகர் : வல்லமை வாய்ந்த மாவீரர் போல் அனைவரையும் கவர்ந்தீர்க்கும் வகையில், நின்ற நிலையில் அம்பு அங்குசம், மழ, குந்தாலி, சம்மட்டி, சூலம்,வாள்,சக்கரம், சங்கு, கேடயம், கதை, கொடி, பாசம், நாகம், வேல்,வில் கொண்ட பதினாறு கரங்கள் கொண்ட சிவந்த மேனி.

5.ஸ்ரீ சக்தி விநாயகர் : தனது சக்தியரில் ஒருவ்ரை மடியில் அமர்த்தி இடது கீழ்க்க்கரத்தால் அணைத்த வண்ணம் உட்கார்ந்த நிலையில் அங்குசம் பாசம் ஏந்தி வலது கீழ்க்கரத்தால் அபயம் அளிக்கும் நான்கு கரமுடைய ஆரஞ்சு சிவப்பு மேனியர்.

6.ஸ்ரீ துவிஜ விநாயகர்: நான்கு முக வெண்ணிலவு வண்ண மேனி, அக்கமாலை,தண்டம், கமண்டலம்,ஏடு ஏந்திய நான்கு கரங்கள்.

7.ஸ்ரீ சித்தி விநாயகர்: எடுத்ததை முடித்து வைக்கும் பொன் மஞ்சள் நிற மேனி,மாம்பழம்,பாசு,கரும்புத்துண்டம், மலர்க்கொத்து கொண்ட நான்கு கரங்கள்,துதிக்கையில் எள்ளுருண்டை.

8.ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்: பேரின்பம் அருளும் பண்பாட்டு காவலர், நீல நிற மேனி, தனது சக்தியுடன் வீற்றிருக்கும் இவர் அக்கமாலை, மாதுளம் பழம், வஜ்ஜிர திரிசூலம், நீலோற்பலம், நெற்கதிர், வீணை தாங்கிய ஆறு கரங்கள்.

9.ஸ்ரீ ஷிப்ர விநாயகர்: வரந்தரு விநாயகரான இவர் தந்தம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி நான்கு கரங்களில் தாங்கியிருப்பார் துதிக்கையில் இரத்தின கும்பம் கொண்ட வண்ன மேனி.

10.ஸ்ரீ விக்ன விநாயகர் : விக்கினங்களின் அதிபதி. தந்தம், மலரம்பு, பரசு, சக்கரம், சங்கு, பாசம், கரும்புவில், பூங்கொத்து ஏந்திய எட்டு கரங்கள். துதிக்கையில் கொழக்கட்டையை வைத்திருக்கும் பொன்னிற மேனி.

11.ஸ்ரீ ஹரம்ப விநாயகர்: சிங்கவாகனத்தில் அமர்ந்திருக்கும் ஐந்து முக வெண்ணிறமேனி.அபயகரம்,தந்தம்,மலர்மாலை,அக்கமாலை,சுத்தி, பாசம், பழம், கதை, கொழக்கட்டை கொண்ட பத்து கரம்.

12.ஸ்ரீ லட்சுமி விநாயகர்: வெற்றியைத் தருபவர்; நீல மலர் ஏந்திய இருதேவியர்களுடைய தூய வெண்ணிற மேனியர்; பச்சைக்கிளி, மாதுளம் பழம், வாள், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, மாணிக்கக்கும்பம், வரம் தரும் கரம் கொண்ட எட்டு கரங்கள்.

13.ஸ்ரீ மகர விநாயகர்: மூன்று கண்களுடன் நெற்றியில் பிறைச் சந்திரன் ஒளிர, சிவப்பு வண்ணத்தோற்றம். தந்தம், மாதுளம்பழம், நீலோற்பலம், நெற்கதிர், சக்கரம், பாசம், தாமரை, கரும்புவில், கதை ஆகியவற்றைத் தாங்கிய ஒன்பது கரங்கள், தாமரை எந்திய கையுடன் கூடிய சக்தியை பத்தாவது கையில் தழவிக்கொண்டு துதிக்கையில் ரத்தின கலசம்.

14.ஸ்ரீ விஜய விநாயகர்: மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் வெற்றியைத் தரும் செந்நிற மேனி, தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் தாங்கிய நான்கு கரங்கள்.

15.ஸ்ரீ நிருத்திய விநாயகர்: ஊன்றிய இடது கால்,தூக்கிய வலது கால், கற்பக விருட்சத்தனடியில் ஆனந்த நடனமாடும் பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், அபிநயம் காட்டுவது போலுள்ள உயர்த்திய கையிலே பாசம், கொழக்கட்டை கொண்ட நான்கு கரங்கள்.

16.ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்: இடது மடியில் அமர்ந்திருக்கும் பச்சை நிறமுடைய தேவியை அணைத்த வண்ணமுள்ள பொன்னிற மேனி. தந்தம், அம்பு, செங்கழநீர்மலர், நெற்கதிர், கரும்புவில்,தாமரை மலர் கொண்ட ஆறு கரங்கள்.

17.ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்: பிறை சூடி, முக்கண்ணனுடன் செம்பட்டுடையும், செம்மலர் மாலையும் அணிந்து குட்டைக் கைகால்களை கொண்டு பத்மாசன நிலையில் மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி, மாதுளம் பழம், அங்குசம், பாசம், கொண்ட நான்கு கரங்கள்.

18.ஸ்ரீ வரத விநாயகர்: வரம் தரும் பிறைசூடிய முக்கண், செந்நிற மேனி, தேன்கிண்ணம், அங்குசம், பாசம், துவஜம் கொண்ட நான்கு கரங்கள்.

19.ஸ்ரீ திரயாட்சர விநாயகர்: ஆடும் காதுகளில் சாமரம் எனும் அணிகளும், தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் கொண்ட நான்கு கரங்கள். தும்பிக்கையில் கொழக்கட்டை பொன்னிற மேனி.

20.ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்: பிறையுடையாடை, முக்கண் கொண்ட சிவந்த மேனி, தந்தம், தாமரை, அங்குசம், பாசம், கற்பகக் கொடியுடன் ஆறு கரங்கள். துதிக்கையில் மாதுளம் பழம்.

21.ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்: மஞ்சள் ஆடையுடைய பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், மோதகம் கொண்ட நான்கு கரங்கள்.

22.ஸ்ரீ ஏகதந்த விநாயகர்: பெருத்த வயிறு, ஒற்றைத் தந்தம், அக்கமாலை, கோடரி, லட்டு கொண்ட நான்கு கரங்களைக்கொண்ட நீல மேனி.

23.ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்: தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம். கொண்ட நான்கு கரங்கள். செந்நிற மேனியில் பெருச்சாளி வாகனம்.

24.ஸ்ரீ உத்தண்ட விநாயகர்: வலது கையில் தாமரை ஏந்தியுள்ள பச்சை நிற தேவியை இடது கையால் அணைத்துள்ள செந்நிற மேனி. த்ந்தம், மலர்மாலை, தாமரை, கதை, பாசம், நீலோற்பலம்,நெற்கதிர், கரும்புவில், மாதுளம்பழம் கொண்ட ஒன்பது கரங்கள் துதிக்கையில் ரத்ன கும்பம்.

25.ஸ்ரீ ருணமோகன விநாயகர்: செம்பட்டுடுத்தி வெண்பளிங்கு நிறம் கொண்டவர். தந்தம், அங்குசம், பாசம், நாவற்பழம் ஏந்திய நான்கு கரங்கள்.

26,ஸ்ரீ துண்டி விநாயகர்: நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் செந்நிற மேனி.தந்தம், அக்கமாலை, கோடரி, ரத்தின பாத்திரம் தாங்கிய நான்கு கரங்கள்.

27.ஸ்ரீ இருமுக விநாயகர்: இரு முகம், செந்நிற ஆடை, ரத்தின கீரிடம், நீலநிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், ரத்தின பாத்திரம் கொண்ட நான்கு கரங்கள்.

28.ஸ்ரீ திரிமுக விநாயகர்: அபயம், அக்கமாலை, அங்குசம் உள்ள மூன்று வலது கரங்கள், பாசம், அமுத கலசம், வரதம் மூன்று இடது கரங்கள், தங்க தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி.

29.ஸ்ரீ சிங்க விநாயகர்: சிங்க வாகனத்தில் அமர்ந்துள்ள வெண்ணிற மேனி. வரதம்,வீணை, சிங்கம், கற்பகக்கொடி கொண்ட நான்கு வலக்க்ரங்கள், தாமரை, மலர்க்கொத்து, ரத்தின கவசம், அபயம் கொண்ட நான்கு கரங்கள்.

30.ஸ்ரீ யோக விநாயகர் : யோக ஆசனத்தில் யோக பட்டம் கட்டிக்கொண்டு யோக தண்டம், அக்கமாலை, பாசம், கரும்பு தாங்கிய நான்கு கரங்கள், நீல நிற ஆடை அணிந்த பால சூரிய நிறம்.

31.ஸ்ரீ துர்க்கா கணபதி: அம்பு, தாமரை, அக்கமாலை, அங்குசம், பாசம், அஸ்திரம், கொடி, வில் ஆகியவற்றை எந்திய எட்டு கரங்கள் செந்நிற ஆடையுடைய பொன்னிறம்.

32.ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்: துயரங்களைப் போக்குபவர், நீல ஆடை அணிந்த பால சூரியன் போன்ற நிறம். இடது மடியில் நில மலரை ஏந்திய பச்சை மேனியுடைய தேவியை அமர்த்தியிருப்பவர். வரதம் அங்குசமுடைய வலக்கரம், பாசம், பாயச பாத்திரமுடைய இடக்கரம்.

Tuesday, 12 March 2013

விநாயகர் அநுபூதி

விநாயகர் அநுபூதி 
1. நாநலம் பெற
*************
பூவார் புனிதா! புவனத்தலைமைத்
தேவா! கரியின் சிரமே உளவா!
மூவாத் தமிழால் முறையே உனைஎன்
நாவால் புகழும் நலமே அருள்வாய்.

2. சொல் வன்மை பெற
********************
வில்லாண் மையரும் விரிமா தமிழில்வல்லாண் மையரும் வளமாய்ப் புகழும்நல்லாண் மையது நனியே மிளிரும்சொல்லாண் மைகொடு எந்துரியப் பொருளே!

3. கீழ்மைப் பண்புகள் அழிய
************************
காமா திகளாம் கயமைப் பிணிகள்போமா(று) அருள்வாய் புரைதீர்த்து எனைஆள்கோமா! கருணைக் குகனார் தமியா!பூமா! பொலமார் புலவா! வருவாய்!

4. முழு முதலை உணர
********************
அந்தே வர்களும் அயன் மால் அரனும்சுத்தாத் துவிதத் துறைநின் றவரும்'கத்தா கரிமா முகத்தான்' எனவேவித்தா ரமொடு விளம்பும் இறையே!

5. குருவாய் வந்து அருள
*********************
வான்காவா எனைஐங் கரனே! மதுரப்பாவா ணர்புகழ் பரமென் குருவே!நீவா விரைவாய் நிமலன் புதல்வா!தாவா கருணைத் தளிர்சே வடியே!

6. பேரின்பம் பெற
***************
ஒருகொம் புடையான்; உயர்மோ தகமே;விரும்பும் பெருமான்; விடையோன் குமரன்;சுரும்பார் தொடையன்; சுகமா குமெலாம்அருள்வான்; அருள்வான்; அடியார் அவர்க்கே!

7. விதியினால் வரும் வேதனை நீங்க
*********************************
பேழ்வாய்ப் பெரியோன் பெரும்பூங் கழலைச்சு+ழ்வார், பணிவார், துதிப்பார் அவர்க்கேஊழ்வே தனைதீர்த்(து) உளமே மகிழவாழ்வே தரும்வல் லபைநா தனரே!

8. பேய் பூதங்களால் வரும் துன்பங்கள் அகல
****************************************
பேய்பூ தமொடு பிலிசு+னியமும்பாய்வேங் கையதும் பரையின் அருமைச்சேய்வா ரணனார் திருப்பேர் புகலப்போய்மாய்ந் திடுமெ புனிதம் வருமே!

9. நல்ல புலமை பெற
பல்காப் பியங்கள் பகரும் திறமும்ஒல்காப் புகழும், உயர்செல் வமதும்நல்காய் நலமாய்; நளின மலர்த்தாள்செல்வா! திகழ்சித் திவிநா யகனே!

10. சிறியவனும் அருள் பெற
பூந்தார் சுழல் வில் புருவம், தளிர்போல்ஆந்தே கம்மிளிர் அணியார் இருவர்சார்ந்தே விளங்கும் தனிமா முதலே!தேர்ந்தே தொழுதேன் சிறியேற்(கு) அருளே!

11. புலன்களை அடக்க
வஞ்சப் புலன் என் வசமாய் நிசமாய்க்கொஞ்சிக் குலவிக் குணமாய் மிளிரஎஞ்சித் தமதில் இனிதே உனதுகஞ்சக் கழல்வை கணநா யகனே!

12. வறுமை நீங்கிச் செல்வம் பெருக
பொல்லா வறுமை, புரைசால் கொடுநோய்எல்லாம் ஒழித்தே எனைஆண் டிடவேவல்லாய் வருவாய் வளமே தருவாய்உல்லா சமிளிர் ஒருகை முகனே!

13. இப்பிறவிப் பயன் பெற்று வீடு பேறு பெற
மகத்தாய் அணுவாய் மதியாய்க் கதிராய்செகத்தாய் அறிவாய்த் திகழ்சாட் சியதாய்அகத்தும் புறத்தும் அகலாப் பொருளாய்இகத்தும் பரத்தும் இருக்கும் பரமே!

14. நிறைந்த அருளைப் பெற
கருணைக் கடலைங் கரனே! கபிலர்க்(கு)அருளே கொடுத்தாய்; அபயம் அளித்தாய்;தருவே அனையாய்! தமியன் தனைஆள்குருவே பொறுமை குணநா யகனே!

15. அருட்பாடல்கள் இயற்ற
கற்பார் இதயக் கமலத்(து) உறையூம்அற்பார் ஒளியே! அழகுஆனை முகா!பொற்பாய் உனது பொலந்தாள் மலர்க்கேநற்பா கொடுத்தேன் நனிஏற்(று) அருளே!

16. செய்த பிழைகள் எல்லாம் தீர
ஆற்றல் அறீயேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான்சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே.

17. எல்லாப் பிறவிகளிலும் இறை எண்ணம் பெற
எந்தப் பிறப்பை எடுத்தா லும் உனைச்சொந்தத் தமிழால் துதிசெய் திடவேகொந்தே அலர்தார்க் குழல்வல் லபையாள்!சிந்தைக்(கு) உகந்தாய்! சிறப்பாய் அருளே!

18. பழைய பாவங்கள் தீர
சிந்தா மணிதான் திகழ்மார் புடையாய்!முந்தை வினையை முழுதும் தொலைத்(து) ஆள்எந்தாய்! எளியேன் எனை நீ எழிலாய்வந்து ஆள்! உயர் ஓ வடிவப் பொருளே!

19. வலிமை பெற
பகையார் அவர்மு புரமே பொடியாநகைசெய் தபிரான் நலமாம் கனியைவகையாய் அருள வலம்வந் தவனே!தகையாய்! திடம்நீ தருவாய் மணியே!

20. எல்லாச் செல்வங்களும் பெற
சீரோங் கிடும்:நல் திறமும் பெருகும்:ஏரோங் கிடுமே: இனிதாம் திடமேபேரோங் கிடும்:நல் பெரும்வே ழமுகன்தாரோங் கடியைத் தொழுவார் தமக்கே!

21. குழந்தைப் பேறும் செல்வமும் பெற
மகப்பே(று) அருள்வான்: மகிழ்வாய் நிதியைஅகத்தே தருவான்: அணியன்: கரிமாமுகத்தான் அடியை முறையாய் நிறையாய்ச்செகத்தீர் தொழுமின்! தொழுமின்! தினமே!

22. நவக்கிரகங்களும் நல்லருள் புரிய
பெருமைப் பரிதி பிறை இத் தரைசேய்அருமால் குருவே அசுரர் குரவன்கருமை அரவூகள் இவை நலமாம்ஒருகை முகன்பேர் உரைப்பார் அவர்க்கே!

23. மன அமைதி பெற
ஓடித் திரிவாய் உலகுஏ ழும்மிகவாடித் திரிவாய் மனனே! தகுமோகூடிக் குலவா ஒருகோ டனைநீபாடிப் பணிவாய் பணிவாய் நலமே!

24. பயமின்றி வாழ
ஏகாக் கரனை எழில் ஐங்கரனைப்பூகாப் பவனைப் பொறுமைக் குணனைமாகா ளியவள் மகனை மனனே!நீகா எனவே நிதமும் பணியே!

25. நலங்கள் பல வந்து சேர
தேடி பணிவார் சிலபேர்: சிறப்பாய்ஆடிப் பணிவார் சிலபேர்: அணியாய்ப்பாடிப் பணிவார் சிலபேர்: அவரைநாடித் தருவான் நலம் ஐமுகனே!

26. பகை நீங்க
துட்டர் குதர்க்கர் தொலைந்தே பொடியாய்ப்பட்டே இரியப் படையை விடுவாய்!சிட்டர் புகழும் திறமே! வளரும்மட்டில் மதமார் மழலைக் களிறே!

27. இதமான வாழ்வூ பெற
விண்நீ: உடுநீ: மிளிர்வா யூவூம்நீ:மண்நீ: அனல்நீ: புனல்நீ: மதிநீ:கண்நீ: மணிநீ: கவினார் ஒளிநீ:எண்நீ: எனைஆள் இதம்செய் பவனே!

28. நல்ல வழியில் செல்ல
தீய நெறிநாத் திகத்தில் திளைத்தேஆய நெறியை அறியா திருந்தேன்தூய நெறியின் தொடர்காட் டினைநீஆயூம் நெறியூம் அறிவித் தனையே!

29. பிறவித் துன்பம் நீங்க
தொல்லைப் பிறவித் துயர்மா கடலுள்அல்லல் வழியில் அழுந்தல் முறையோ?செல்வா! பிரமச் செழுமா மணியே!நல்லாய் கரைஏற் றிடும் ஐங்கரனே!

30. அறியாமை அழிய
மாயை எனும்கார்த் திரையைத் தெரிந்துஎன்பேயை விரட்டும் பெருமான் ஒருவன்:தாயை நிகர்த்த தனிமா முதல்வன்:காயைக் கனிஆக் குவன்கண் ணியனே!

31. நன்மைகள் பெற
அயில்கை உளநம் அறூமா முகற்கேமயிலூர் திதனை மகிழ்ந்தே அளித்தான்செயிர்தீர் அடியார் சிறப்பாம் வகையில்ஒயிலாய் நலம்தந்(து) உயர்த்தும் அவனே.

32. அர்ச்சித்து அருளைப் பெற
கரிமா முகனின் கருணை அறியார்எரிவாய் நரகில் இடரே படுவார்:விரிமா தவரும் விரும்பும் பெரியோன்அரிதா அருச்சித்(து) அவனைப் புகழே.

33. எண்வகைச் சித்திகளைப் பெற
இருநான்(கு) அவதானம் எண்சித்திகளும்பெருமான் உமையின் பெரும்பிள் ளையவன்தருவான்! தருவான்! தரவே விரைவாய்வருவான்! வருவான்! வழுத்தாய் மனனே!

34. பிரணவப் பொருளை உணர
கருமால் வினையைக் களைந்தே அருளும்திருவைந் தெழுத்தும் திகழா றெழுத்தும்இருநான் கெழுத்தும் எமதுஐங் கரனார்ஒருபேர் எழுத்தே: உணர்வாய் மனனே!

35. இறை எண்ணம் பெற
அளவைக் கடந்தான்: அகிலம் கடந்தான்:உளதத் துவத்தின் உயர்வைக் கடந்தான்:வளமாம் நிலைமேல் வசிப்பான் பெரியோன்உளமே அறிந்துஇன் புறவே வருவாய்!

36. படித்தோர் துன்பம் நீங்க
கத்தும் தரங்கக் கடல்சு+ழ் புவியில்தித்தித் திடும்செந் தமிழ்மா லைசெயூம்வித்தர் களின் தீ வினையை விலக்கும்அத்தித் தலையன் அருட்பார் வையதே!

37. நல்ல கவி பாட
ஆரா அமுதம் என ஆ சுகவிசீராப் புகலும் திறமே அருள்வாய்!தீராக் கலைகள் திகழ்வா ரிதியே!வாராய்! வளமே வளர்வா ரணனே!

38. விநாயகனைக் கண்டு மகிழ
வேதா கமமே மிகவூம் புகழும்பாதாம் புயனே! பணிசெய் அடியேற்(கு)ஆதா ர!நின(து) அருட்காட் சிதரவாதா எழில் 'ஓ' வடிவானவனே!

39. விநாயகனின் அருளைப் பெற
உம்பர் புகழும் உறூதிப் பொருளே!தும்பிச் சிரனே! தொழுதேன்: தொழுதேன்:நம்பும் எனைநீ நழுவ விடாமல்அம்பொன் கரத்தாய் எனைஆண்(டு) அருளே!

40. குறை தீர
 கவிஞன் புகழும் கவின் ஆர்தமிழ் உன்செவிஏ றியூம்நீ திருகல் சரியோ?புவிதான் புகழும் புழைக்கைய! கரம்குவிவேன்: மகிழ்வேன்: குறைதீர்த்தருளே!

41. அருள் மழையில் நனைய
மங்கை வலபை மணவா ளன் அருள்பொங்கும் புலன் போல் பொழிந்தே புவனம்எங்கும் நிறைந்தே இருக்கின் றதுகண்!துங்கக் குணத்தீர்! புசியின் தொழுதே!

42. ஆணவம் அகல
மூல மலவா தனைதீர் முதல்வா!சீல செழும்செம் சடையன் சிவனார்பால! உயர்தற் பரனே! அருள்தா!கோலம் மிளிரும் குணமார் பொருளே!

43. பக்குவம் பெற
சித்தி தரும்சத் திநிபா தமதேஎத்தி நமதில் எனைவந்(து) உறுமோ?அத்தி முகவா!அருமைத் தலைவா!சத்தி தனையா! தமியற்கு உரையே!

44. துயரம் நீங்க
முதல்வா படவே முடியா(து) இனிதோஇதமே அருளா(து) இருத்தல் என்ன? பொற்பதமே உடையாய்! பணிந்தேன்! பரையின்புதல்வா அருளாய்! புரைதீர்ப் பவனே!

45. பேரருள் பெற
சீலன் துதிக்கைச் சிரனை அனவேஞாலத் தினிலே நலம் ஈவர் எவர்?கோலச் சிகிவா கனனாம் குகனும்சாலப் புகழும் தனிமன் அவனே!

46. கவலைகள் ஒழிய
திண்தோள் சதுரும் திகழ் ஐங்கரமும்வண்டார் குழலார் மகிழ்ந்தே மருங்கில்பண்டே வளர்கோ லமதைப் பணிவாய்க்கண்டேன்: களித்தேன்: கவலை இலனே!

47. ஞானம் பெற
மோன நிலையில் முழுசித் திபெறும்ஞானம் தருவாய்! நலமார் பெரியோய்!தீனன் எனைஆள் திருமன் கருணைத்தேனம் எனவே திகழ்கின் றவனே!

48. பிறவி அச்சம் நீங்க
அச்சம் விடுத்தேன் அரனார் முதலோர்மெச்சும் படியாய் மிளிர் ஐங்கர! நின்பச்சைத் தளிராம் பதமே பலமாய்இச்சை யூடனே பிடித்தேன் இதமே!

49. சகல சித்திகளும் பெற
பக்தி நெறியில் பலமாய் உறைவார்அத்தி முகனின் அடியைப் பணிவார்;முத்தி பெறுவார்; முதன்மை உறுவார்;சித்தி இடைவார் திடமே! திடமே!

50. புகழைப் பெறுவதற்கு
தாதா சரணம்; சரணம் தளிர்த்தாள்நீதா சரணம் சரணம்; நிகர் இல்வேதா தரணே சரணம்; மிளர் ஐம்பூதா சரணம்! புகழ்நாற் புயனே!

51. உலகம் வாழ
ஊழி முதல்வன் உயர்வே ழமுகன்வாழி! திருசத் திகளும் அணியாம்வாழி! கவினார் வாச மலர்த்தாள்வாழி! அடியார் வளம்வா ழியவே!